குடந்தையில் 50ஆவது பொன்விழா ஆண்டை நோக்கிப் பயணிக்கும் ஏ.ஆர்.ஆர்.கல்விக்குழுமம் சார்பாக கிரிகெட் பயிற்சி அகாடமி ஏ.ஆர்.ஆர். மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் 25.05.2022 அன்று இனிதே தொடங்கப்பட்டது. இதனை குடந்தை நகர் மன்றத் துணை மேயர் திரு.சு.ப.தமிழழகன் அவர்கள் தொடங்கி வைத்து சிறப்புரையாற்ற பள்ளியின் தாளாளர் திரு.கே.எஸ்.சுப்ரமணியம், செயலர் திரு.ஏ.எம்.வைத்தியநாதன் அவர்கள் தலைமையேற்க திருமதி ரேவதிமோகன் கல்வி ஆலோசகர், நமது D.பாஸ்கர் ஏ.ஆர்.ஆர்.மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியின் முதல்வர். திருமதி ஆர்.ராதா ஏஆர்ஆர் எஸ் எல் வித்யாஸ்ரம் சீனியர் செகண்டரி பள்ளி(CBSE) முதல்வர், மற்றும் பெற்றோர்களும் பொது மக்களும், மாணவர்களும் கலந்துக் கொண்டனர் ஏராளமான மாணவ, மாணவியர் இப்பயிற்சி அகாடமியில் தங்களை பதிவு செய்து கொண்டதோடு விழா இனிதே நிறைவுற்றது.